மொழியானது தனது வாழ்நாளை நீட்டிக்கொள்ளவும், பலவகை பரிணாமங்களை எட்டவும் உதவக்கூடிய காரணிகளில் ஊடகமானது பெருவாரியான பொறுப்பினை ஏற்கிறது. உலகில் தளைத்தோங்கிய சில மொழிகளுக்கு இக்கருத்து ஒத்துப்போகும். அவ்வகையில் நம் தொன்மை பொருந்திய தமிழ் மொழியும் கடந்த மற்றும் நிகழும் நூற்றாண்டுகளில் ஊடகங்களின் துணை கொண்டு உறுவெடுத்ததைக் காணலாம் 21ம் நூற்றாண்டில் காரைக்குடியில் வெளியான குமரன் இதழ் -(1930)- முருகப்பா எனும் ஆசிரயரால் வெளியடப்பட்டது. அவ்விதழ் சில எழுத்து சீர்திருத்தங்களுக்கு உதவின. 1935 ல் வெளியான குடியரசு மற்றும் விடுதலை இதழ்களில் ஆசிரியர் பெரியார் மற்றும் பட்டு மாணிக்கம் மூலமாக சில சீர்திருத்தங்கள் மொழியில் செய்யப்பட்டன. இம்முயற்சியே எழுத்து சீர்திருத்தத்தின் தொடக்கமாய் அமையப்பெற்றன. தற்காலத்தில் ஊடகத்தின் வளர்ச்சி பற்றி கூற வேண்டியதேயில்லை. ஆனால் ஊடகம் மொழிக்காகவும் அதன் வளர்ச்சிக்காகவும் எடுக்கும் முயற்சிகள் குறைவே. மாறாக மொழியின் அழிவிற்கும் வித்திடக்கூடிய அளவில் செயல் படுகின்றன.
ஆம் எழுத்து சீர்திருத்தவாதி பெரியார் மற்றும் அண்ணாவின் வழி
வழி வந்த கலைஞர் இந்த செயலை செய்வது அருவருக்கசெய்கிறது தற்போது வெளிவரும்
தி ரைசிங் சன் என்ற வார இதழ் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் வெளியாகும் தமிழக நாளிதழ் திராவிட இயக்கத்தின் போர் வாள் எனவும் இது வர்ணிக்கப்படுகிறது. ஒரு காலத்தில் ஹிந்தி திணிப்பு,ஹிந்தி எதிர்ப்பு,ரயில் மறியல், தண்டவாளத்தில் தலை வைத்தல்,போன்ற
போன்ற உன்னத மொழி போராட்டங்கள் நிகழ்த்திய தலைவர்களுள் ஒருவரே இத்தகைய செயல்களை செய்வது குறிப்பிடத்தக்கது. தமிழர் நலனுக்காகவும் தமிழின் வளர்ச்சிக்காகவும் அயராது உழைக்கும் இது போன்ற இதழ்கள் ஒருபுறம் இருக்க,
கியோடோ பல்கலைக்கழகம் ஜப்பான், லிதுர்நியா பல்கலைக்கழகம் ஹான்க் காங், லண்கச்ட்டர் பல்கலைக்கழகம் இங்கிலாந்து, இது போன்ற பலகலைக்கழகம் வழியாக பயிலும் ஆய்வு மாணவர்கள்,பேராசிரியர்கள்,முனைவர்கள்,மூலமாக கலாச்சாரம், அறிவியல், தொழில் உற்பத்தி, வேளாண்மை போன்ற கட்டுரைகள் தக்க ஆவணங்களுடன் சிறந்த முறையில் ஒளிபரப்ப படுகின்றன, உலக ஆராய்ச்சி நிறவனங்கள்,உலக பாதுகாப்பு அமைப்புகள் உதவிகொண்டு இயற்கைக்கும் மனிதனுக்குமான தொடர்பினையும் திகைப்பூட்டும் உண்மைகளையும் தமிழின் தெளிவான கலைச்சொல் வடிவத்துடன் நிகழ்சிகளாக தொகுத்து வழங்குகிறது. இந்த வகையான ஊடகங்கள் நம் நாட்டையோ நம் மாநிலத்தையோ சேர்ந்தவை அல்ல . இங்கில்லாந்து மற்றும் அமெரிக்க நாடுகளில் இருந்து, ஒளிபரப்பாகும் தொலைகாட்சி அலைவரிசைகள்
இவ்வகையான அலைவரிசைகளுக்கு இருக்கும் ஆர்வங்களும் முயற்சிகளும் தமிழ் மொழியின் கலைச்சொல் பயன்பாட்டிற்கும் எளிமையான கருத்து புரிதலுக்கும் துணை சேர்க்கிறது. ஆனால் திராவிட போர்வாள் போன்ற தறிகெட்ட இதழ்களால் மொழியானது சிதைகிறது இவ்விதமான சில வேடிக்கை மனிதர்கள் வீழ்வது எப்போது?