Thursday, March 24, 2011

பலி ஆடுகள்

தாம் பலி ஆக போகிறோம் என்பதை அறியாத ஆடுகளாக இன்றைய வளரும் நாடுகள் அசை போட்டுக் கொண்டு அலைகின்றன. முதல் ஆடு, ஆசிய நாடுகளில் வரலாற்று புகழ் பெற்ற இந்தியா தான்,பிரிவினை வாதத்தை தூண்டி இரு தரப்பினரிடையே போர் மூளச்செய்த்து, தனது உற்பத்தி பண்டங்களான ஆயுதங்களை விற்பனை செய்யும் முதலாளித்துவ நாடுகள் ஒரு பக்கம். மேலை நாடுகளுக்கு  காவு கொடுக்கும் வகையில் வளரும் நாடுகளின் பொருளாதார திட்டங்கள் மறு பக்கம்.
நகரமயமாதல் எனும் நஞ்சு நாடு முழுவதும்  பரவதொடங்கி  வெகு காலம்  ஆகிறது.  நாட்டின் அரசியல் நிகழ்வானது  தன் உடலையே தான் உண்ணும் விந்தையாக மாறி இருப்பதை  இங்கு ராணுவத்திற்கும் புரட்சியாளர்களுக்கும் இடையேயான போராட்டங்கள் முன் வைக்கின்றன. மக்கள் எதையுமே சிந்திக்க விடாத வகையில் இலவசத் திட்டங்கள். எவனை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் வேறு. தனது தனித்தன்மையை மெல்ல மெல்ல இழக்கும் மொழிகளின் பரிதாப நிலை வேறு. உற்பத்தியாளர்களாக இருந்தவர்கள் வாடிக்கையாளர்களாக மாறும் நிலை. கதறி அழும் விவசாயிகள், மாற்று  தொழில் தெரியாத மீனவர்கள், ஒரு ஓட்டிற்கு ஒரு வேளை உணவாவது கிடைக்காதா என ஏங்கும் வாக்காள பெருமக்கள், வேலை வெட்டிகளை விட்டு விட்டு வேட்பாளர் பின் சுற்றும் ரத்தத்தின் ரத்தங்கள்,  சுய தேவைகளை பூர்த்தி செய்ய தலைவர்கள் பின் அலையும் கழக உடன் பிறப்புகள், கொள்கைகளை கூட மனபாடம் செய்யத்  தெரியாத கட்சியின் வேட்பாளர்கள்,  கேலி கூத்திற்கு இடமளிக்கும் வகையில் தேர்தல் பிரச்சாரங்கள்  
கவர்ச்சியான பிரச்சார பீரங்கிகள், ம்ம்ம்ம் ........
எனக்கான தலைவனை தேர்ந்தெடுக்கும் நிலை மாறி தமக்கான தலைவனைத் தேர்ந்தெடுக்கும் வகையில் வாக்களிப்போம் ஆடுகளாய் அமையாமல் மனிதர்களாய் உயர்வோம்.


1 comment:

  1. En manadhil ullavaigalai un urayil solliyirukkirai mikka magizhchi. Naan arasiyalvathigalai than verukirean arasiyalai alla. Ippothaiya Arasiyalai patri pesinal pesi kondae pogalam. Inru arasiyalil varubavargal panam parpadharkumattume arasiyalukku varugirargal.Idhai patri pesinal inda katturai podhathu. Ennai poruthavari oru murai vakku seluthuvadhai niruthinal arasiyal vathigal konjam payappaduvargal. Aanal vakku seluthamal iruppadhu kutram enru solvargal, vakku seluthi thavarana aalai therntheduthu 5varudam thandanai peruvathi vida vakku seluthamal irunthu nalladhu seyya virumbuvaen...... Unadhu indha sinthanai valaravum innum idhu ponra katturaigal ezhudhavum vazhthukiran..

    ReplyDelete